Friday, April 6, 2012

மக்கு மணிவண்ணன்


இந்தா போட்டோல இருக்குறவன உங்க யாருகாவது தெரியுமா ? நல்ல கேள்வி... எனக்கே தெரியாத போது உங்கள கேக்குறது ஞயாயம் இல்லை தான்
இருந்தாலும் கேக்குறேன்...

தெரியாது சரி ஒத்துக்குறேன்... ப்ளாகுல போட்டோ போடற அளவுக்கு இவரு பெரிய ஆளா ? இல்ல சப்ப மேட்ரு தான்.. அப்ப எதுக்கு இவருக்கு வெளம்பரம்

கேக்கணுமுல்ல, கேக்கணுமுல்ல, சரி சொலுறேன் , இவரு சாதா மேட்டருதான் ஆனா இப்போ ஸ்பெஷல் சாதா ஆயிட்டாரு எப்புடி ?

அதாவது நாம எல்லாமே சாதா மேட்டருதான், அப்படி இருக்குறப்போ இவரு மட்டும் தற்கொல பண்ணிக்கிட்டு ஸ்பெஷல் சாதா ஆயிட்டாரு

ஒடனே கேள்வி வருமே ... ஏன் தற்கொல பண்ணிகிட்டாறு ?

அட ஏனப்பா நீ வெவரமே புரியாம... ஒரு பையன் இருவதியாறு பாடத்துல பெயில் ஆனா தற்கொல பண்ணிக்காம சந்தோசமா சுத்தியா  வர முடியும்  ?
( நாம எல்லாம் எப்புடி எப்புடி எல்லாம் பெயில் ஆகி இருக்கோம் என்னென்ன மாதிரி எல்லாம் பெயில் ஆகியிருக்கோம், இந்த புள்ள நம்மளயெல்லாம் பாத்ததே இல்ல போல  )
 அதுலயும் இந்தியாவின் மிக சிறந்த பல்கலை கழகத்துல படிச்சிட்டு பெயில் ஆனா தற்கொல பண்ணிக்காம  என்ன பண்றது.

அதாவது மக்களே இந்த மக்கு மணிவண்ணன் அண்ணா யுனிவெர்சிட்டி இல்ல அண்ணா யுனிவெர்சிட்டி அதுல மூணாப்பு படிக்கிறானாம் (அதாம்பா  மூணாவது வருஷம் )
அதுல இருவதியாறு பாடத்துல பெயில், இந்த மக்கு பசங்க எல்லாம் இருந்தா என்ன இல்லாம போனா என்ன. இப்புடி பட்ட மக்கு பசங்க எல்லாம் எதுக்கு  அண்ணா யுனிவெர்சிட்டி மாதிரி
பெரிய படிப்பு படிக்கிற எடத்துக்கு எல்லாம் வராங்க, அண்ணா யுனிவெர்சிட்டி, ஐ ஐ டி,  ஐ ஐ எம் ஐ ஐ எஸ் சி எல்லாம் இந்த மாதிரி மக்கு பசங்க படிக்கவ கட்டி வெச்சி இருக்கு

அதுக்குன்னு  புத்திசாலி பசங்க தனியா இருக்குறாங்க அவுங்கள தயார் பண்றதுக்குன்னே தனியா பள்ளி கூடம் இருக்கு... இப்படி இருக்குறப்போ இந்த மக்கு மணிவண்ணன் எல்லாம்
தேவையில்லாம வந்து சீட்ட புடிச்சா என்ன ஆவும், பேராச புடிச்சா இப்புடி தான் ஆவும்...

நான் தெரியாம தான் கேக்குறேன் இவனுக்கு எல்லாம் எதுக்கு இன்ஜினியரிங் படிப்பு ஒரு பி எ வோ ஒரு பி கா மோ படிச்சிட்டு குமாஸ்தா வேலக்கி போகம எதுக்கு இன்ஜினியரிங் படிப்பு.

நீ தமிழ்ல தானே படிச்சே... தமிழ்ல தானே படிச்சே அப்போ குமாஸ்தா வேலைக்கோ வாத்தியார் வேலைக்கோ தானே போகணும். எதுக்கு மெட்ரிக் குலேசன் சி பி எஸ் இ படிச்சா மாதிரி இஞ்சினீர்  ஆவனமுன்னு கனவு.
(எனக்கு தெரிஞ்சி " கோ இன் சயிட் லேடீஸ் ஆர் அவைலபெல் " அப்புடின்னு சொன்ன எச் ஒ டி யா பாத்து அசந்து போயிருக்கேன், நாங்க பேசாம உள்ள போயிட்டோம் அப்புறம் விசாரிச்சப்ப தான் தெரிஞ்சிது
பொம்பள பசங்க எல்லாம் கிளாசுல இருக்கப்போ ஆம்புள பசங்க ஏன் வெளிய நிக்கிறிங்க உள்ள போங்கன்னு சொன்னாராம், அதுக்காக  அவுரு படிச்ச பி டேக் எம் பில் தப்புன்னோ பாடத்துல அவரு மக்குன்னோ சொல்ல மாட்டேன், அவருக்கு இங்கிலீசு தெரியலை அவளோதான் )

ஏங்க நான் கேக்குறது தப்பா? இந்த பையன் மணிவண்ணன் எங்கியோ தர்ம புரில ஒரு எழபட்ட வீட்டுல பொறந்து தமிழ் மீடியம் ஸ்கூலுல படிச்சி வந்துருக்காம்.

அங்க என்ன இன்ஜினியரிங் காலேஜி மாதிரி இங்கிலீசுலய சொல்லி குடுக்குறாங்க... இல்ல எட்டாப்பு படிக்கும் போதே ப்ரோஜெக்டு வோருக்கு குடுக்குராகளா...

பத்தாப்பு பாடத்த ஓம்பதாவுலியே முடிச்சி பத்தாப்பு பூரா வெறும் டெஸ்டு வெச்சி பிளஸ் டூ பரிச்சைக்கு பிளஸ் ஒன் லையே பாடத்த முடிச்சி எம்புட்டு கழ்டபட்டு பசங்கள தயார் பண்றாங்க...
அதுக்கு எம்புட்டு செலவாவுது... பன்னண்டு மாச படிப்ப இருவத்தி ரெண்டு மாசமா இழுத்து பசங்க எல்லாத்தையுமே தொன்னுருக்கு மேல வாங்க வெச்சி ஆயிர கணக்குல பீசு வாங்கி...

இப்புடி எதுவுமே பண்ணாம நீ பாட்டுக்கு கிராமத்து ஸ்கூலுல படிச்சிட்டு திடீருன்னு வந்து  இன்ஜினியரிங் காலேஜில குதிச்சா இப்புடித்தான் ஆவும்.

கூட படிக்கிற பசங்க கூட இங்கிலீசுல பேசவும் முடியாது, ப்ரஜக்டு வோருக்கு இன்னா என்னன்னும் தெரியாது ஆனா ஆறுமாசத்துல ஆறு பேப்பர் எக்சாமுன்னா இப்புடித்தான் இருவதியாறு பாடத்துல பெயில் ஆகா வேண்டி இருக்கும்...

உன்னோட மக்கு மரமண்டைக்கு இன்ஜினியரிங் காலேஜி சேந்த பொறவுதான் இது எல்லாம் புரிஞ்சா அது யாரு தப்பு ?

எல் கே ஜி அட்மிசன் பீசு தெரியுமா உனுக்கு... உங்க அப்ப அம்மா எக்ஸாமு எழுதி இருக்கங்களா ( நீ படிக்க )... லட்ச கணக்குல பீசு கட்டியிருக்கியா...

இன்ஜினியரிங் டாக்குடரு படிப்ப எல்லாம் அப்பவே ஆரம்பிச்சி இருக்கணும்... இல்லையா ஏதோ ஒரு மூணா வானா காலேஜில போயி பேருக்கு இன்ஜினியரிங் படிச்சி இருக்கணும்

அதெல்லாம் விட்டு போட்டு மகா புத்தி சாலிகள் உருவாகுறதா இந்திய பூரா சொல்லுறாங்களே  அந்த எடத்துக்கு எல்லாம் உன்ன யாரு வர சொன்னா ?

என்னா என்னா கேட்ட? அப்போ பன்னண்டு வருசமா நீ படிச்சது என்னன்னா ?

ஸ்டேட்டு போர்டு படிப்புக்கும் இதுக்கும் ஏன் இவ்வளோ வித்தியசமுன்னா... ஆதஏன் என்ன கேக்க ? ஆதஏன்ல  என்ன கேக்க ?

ஏன் எல்லோருக்கும் சமமான படிப்பு ஸ்கூல்லயே இருக்க கூடாதுன்னா ? ஆதஏன்ல  என்ன கேக்க ?

பிளஸ் டூல  1156 மார்க்கு ஸ்டேட்டுல பதிமூனா ரேஞ்க்கு எடுத்தும் இன்ஜினியரிங் படிக்க முடியலேன்னா ஏன்ல என்ன கேக்க ?

எதுக்கு ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, மெட்ரிக் குலேசன் தமிழ் மீடியம் இங்கிலீஸ் மீடியம்ன்னு தனி தனியா ?
எல்லாருக்கும் ஒரே படிப்பு வெச்சா நா எதுக்கு தற்கொல பண்ணிக்கனும் ? கரக்டு..... ஆதஏன்ல  என்ன கேக்க ?

சமசீர் கல்வி .... நிறுத்து நிறுத்து என்ன வார்த்த சொன்ன..

நாங்க எல்லாம் அப்புடி தான் எல்லாத்தையும் தனி தனியா தான் வெச்சிருப்போம், தனி தனியா பீசு வாங்குவோம்

படிக்கும் போதே நீ ஏழ, அவன் பணக்காரன், நீ தமிழு அவன் இங்கிலீசு அப்பிடின்னு பிரிச்சி வெப்போம், என்னா பண்ணுவ ?

ஒவ்வொரு  வருசமும் ஐ ஐ டி,  ஐ ஐ எம் ஐ ஐ எஸ் சி ல உன்ன மாதிரி எத்தன பசங்க தற்கொல பண்ணிகிரனுங்க தெரியுமா

எந்த சேனலோ பேப்பரோ மீடியவோ இத ரொம்ப முக்கியமுன்னு அக்கறையா விவாதிச்சி இருக்கங்களா

பன்னிரெண்டாம் வகுப்பு வரை புத்தி சாலி என்று அறியப்பட்ட மாணவன் பட்டபடிப்பில் இருவத்தி மூன்று பாடத்தில் பெயில் ஆகி தற்கொலை செய்து கொண்டாரென்றால்

பண வெறி பிடித்த பாகுபாடான இந்த சமூகத்தில் வாழ நான் உண்மையில் வெட்க படுகிறேன்.....

இறந்து போனவர் தனிமனிதர் அல்ல இன்று படித்து முன்னேற துடிக்கும் ஒவ்வொரு மாணவரின் நிழல்

இந்த பதிவில் தவறான வார்த்தைகளால் நான் திட்டியது மணிவண்ணனை அல்ல என்னையும் சேர்த்து இந்த சமூகத்தை....

கையாலாகாத என்னை போன்ற சமூக அடிமைகளெல்லாம்  இப்படி எழுதுவதை தவிர வேறு என்ன பெரிதாய் புடிங்கி விட முடியும்...

இது வரை இறந்து போன மணிவண்ணன்களுக்கு என்  கண்ணீர் அஞ்சலிகள்

Saturday, March 31, 2012

கமிசனர் ஆப்பிசுலர்ந்து போன்

வீட்டுக்கு வந்த விருந்தினர் மகள் ஹாலில் விளையாடிக்கொண்டு இருந்தாள். தூரத்து உறவு பல வருடமாய் பெங்களூரில் செட்டிலாகி இத்தனை வருடம் கழித்து வந்திருக்கிறார்கள், அவர் கிட்ட எத்தன வாடி சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு ஆபீசுக்கு கேளம்பிடறார்.

வாசல் மணி அடித்தது... வாசலை பார்த்தேன் நிழலாடியது, கதவருகில் கவனித்தேன் " ஹோ அந்த பையனா ? "

நினைவுகள் சில மாதங்கள் பின்னோக்கி அசை போட்டன. தங்கையும் தங்கச்சி வீட்டுகாரும் வந்திருந்த போது இப்படித்தான் வந்தான், தங்கச்சி வீட்டுகாரர் தான் கதவை திறந்தார்

 " சார் ஊதுவத்தி வாங்கிக்குங்க சார் "

 "வேணாப்பா வீட்டுல இருக்குது "

 " சார் ரெண்டாவது வங்கிக்கிங்க சார் பத்து ரூபா தான், எக்ஸாம் பீஸ் கட்டனும் இன்னிக்கி கடைசி நாள் "

கதவை சாத்த போனவர் நின்றார் " ஹ்ம்ம் என்ன படிக்கிற ? "

 "பாலிடெக்னிக் சார் செகண்ட் இயர் "

 " என்ன சப்ஜெக்ட் ?" " டிப்ளமா இன் எலெக்ட்ரிகல் சார் "

 " ப்ரூப் வெச்சிருக்கியா ? "

அவன் ஐடி கார்டை காண்பித்தான் வாங்கி கொஞ்சநேரம் அதையே திருப்பி திருப்பி பார்த்துகொண்டிருந்தார்... விழுப்புரத்தில் மணியம்மை பாலிடெக்னிக். ஐடி ஒரிஜினல் தான் அவன் போட்டோவும் இருந்தது.

பிறகு " எவளோ பீஸ் கட்டணுமுன்னு சொன்ன ?"

" எட்டுநூத்தி அம்பதுருபா சார்... "

" அது சரி வீடு எங்க சொன்னே ? " விழுப்புரம் பக்கத்தில் ஏதோ கிராமம் பேர் சொன்னான்.

" அப்போ ஊதுவத்தி விக்க விழுப்புரமே போதுமே, எதுக்கு பாண்டிக்கு வந்த ?"

" தெரிஞ்ச ருல விக்க வெக்கமா இருக்கு சார்... " கொஞ்ச நேரம் யோசித்தவர்.. .இரு வரேன்,

சென்று பர்சை எடுத்து வந்தார் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன... 

" அடடே ஐநுருதனே இருக்கு... இரு"

 திரும்ப சென்று பையை நோன்டியவர்

 " இந்தா இதுல ஒரு முன்னூறு இருக்கு மொத்தம் எட்டுநூறு..... அம்பது ருபாய் எங்கியாவது போரட்டிக்க " என்றார்.

அவன் காலில் விழுந்தான் " அட எந்திரி பா படிக்கிற பசங்க கால்ல போய் விழுந்துகிட்டு போய் படி, எப்ப உதவி வேணுமுன்னாலும் சொல்லு " என்றார்

அவன் சென்றவுடன் அவர் திரும்பி பின்னல் நின்ற என்னிடம் " பாக்க நல்ல பையனா தெரியறான் ? கார்டு ஒரிஜினல் தான் ? பாவம் படிக்கிற பசங்க வூட்டுல என்ன கஷ்டமோ ? "


 " என்ன சரோ இன்னக்கி கடைக்கு போகணுமுன்னு சொன்னா, நானும் சரின்னுடேன் இப்போ பர்சு காலி " சிரித்தார்

 " விடுங்க பசங்க படிப்புக்கு முன்னால நம்ப கழ்டமெல்லாம் பெரிசில்ல. நானெல்லாம் சின்ன வயசுல படிக்க ரொம்ப கஷ்டபட்டேன், இவனுக்காவது ஊதுவத்தி விக்க தோனுச்சி, அப்ப எனக்கு அது கூட தோணலை" அவர் சுய புராணம் பாடிகிட்டே உள்ளே சென்றார்.

அதற்கு பிறகு சில தடவை வந்தான் கையில்அதே ஊதுவத்தி , டெர்ம் பீஸ்க்கு புக்கு வாங்க என்று, என்னால் முடிந்த பணம் கொடுத்திருக்கிறேன். அவனை பார்த்தவுடன் கையில் காசில்லை என்பது ஞபகத்தில் உரைத்தது, எப்படியும் வீட்டுக்காரர் போன் பண்ணுவார், ஏற்கனவே சொல்லியிருக்கேன் விருந்தாளி வருவது பற்றி... அவரிடம் இருக்கும் பார்த்துக்கலாம் (அவர் அரசு கருவூலத்தில் கணக்கர் வேலை, பெரிசாய் இல்லை என்றாலும் நிலையான சம்பளம், இப்போ ரெண்டு வாரமா கமிசனர் ஆபிசில் போஸ்டிங் ஏதோ கணக்கு வழக்கு பாக்கனுமாம், அது வீட்டுல இருந்து கொஞ்சம் அருகில் இருந்தது, போக வர வசதி என்று சந்தோஷ பட்டு கொண்டார்.

நினைவுகளில் இருந்து திரும்பி யோசித்து கொண்டே கதவை திறக்க போனேன், போன் மணி அடித்தது,

 " அம்மு அந்த போன எடு "

 கதவை திறந்து " வா தம்பி எப்படி படிக்கிற ? "

 " நல்லா படிக்கிறேங்க ஆனுவல் பீஸ் கட்டனும் "

 "உள்ள வாப்பா தண்ணி குடிக்கிறியா ? உக்காரு "

அவன் சோபாவில் அமர்ந்தான் அதற்குள் அம்மு வந்தாள்

" ஆண்டி கமிசனர் ஆப்பிசுலர்ந்து போன் "

அவன் சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தான்

குடும்மா என்று வாங்கினேன் " ஹலோ சொல்லுங்க ஆமா நான் சொல்லல... ஆமா வந்துருகாங்க நீங்க வொடனே பத்து நிமிசத்துல இங்க வரிங்களா " என்ற படி தண்ணீர் எடுக்க சமயலறைக்கு போனேன்.

 செம்பில் தண்ணீர் மொண்டு கொண்டே " அந்த பையன் வந்துருக்காங்க நான் கூட சொல்லுவனே "
 " ஆமா கைல காசு இல்ல, பீஸ் கட்டணுமாம் நீங்க கொஞ்சம் வீட்டுக்கும் வாங்களேன் " என்று பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்தேன்

சோபா காலியாய் இருந்தது... சுற்றிலும் பார்த்தேன் அவனை காணவில்லை... விறு விறு என வாசலுக்கு வந்தேன். அவன் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தான்...

 தம்பி என்று கூப்பிட்டேன், வேகமாய் நடக்க ஆரம்பித்தான்

" தம்பி "

அவன் தெருவில் ஓட ஆரம்பித்தான் ....