Tuesday, June 25, 2013

டாடி எனக்கொரு டவுட்டு


நிலவில் முதலில் கால் வைத்த மனிதன் யார் ?
அமெரிக்காவை சேர்ந்த ஆம்ஸ்ராங் மற்றும் அல்டரின் என்ற இரு விஞ்ஞானிகள் கி பி 1969 ஆம் ஆண்டு நிலவில் இறங்கினர். ஆம்ஸ்ராங் முதலில் இறங்கி, நிலவில் கால் வைத்த  முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்.

நிலவில் உயிரினங்கள் உண்டா ?
நிலவில் காற்றும் நீரும் கிடையாது, அதனால்அங்கு உயிரினங்கள் வாழ முடியாது

என்னங்க அஞ்சாம்  கிளாஸ் பாட புத்தகம் மாதிரி இருக்குதா ?
நாங்க எல்லாம் சின்ன வயசுல இப்புடி தாங்க  படிச்சோம், நீங்களும்  இப்புடி தான் படிச்சிருப்பிங்க. ஏன் உலகமே இப்புடி தான் படிச்சிருக்கும். இதெல்லாம் யாரு கண்டுபுடிச்சி சொன்னா ? அமெரிக்கா ............?

அவுக சொன்னாக நாம அப்புடியே ஏத்துகிட்டோம். ரொம்ப நாளக்கி அப்புறம் இந்தியான்னு ஒரு ஏழை நாடு 2008 டுல ஒரு சின்ன செயற்கை கொள அனுப்பி நிலாவ ஒரு 100 கிலோ மீட்டர் துரதுல இருந்தே ஆராஞ்சி படம் புடிச்சி அனுப்புச்சி.

அத பாத்த இந்திய விஞ்ஞானிக அட அதுல தண்ணி ஐஸா ஓரஞ்சி கட்டி கட்டியா இருக்குறத கண்டுபுடிசங்க.

 இங்கன தாங்க  எனக்கொரு  சந்தேகம் ?


இதனை வருசமா ராகெட்ட அனுப்பி ஏன்  ஆளையே அனுப்பி பாத்துட்டு தானே அங்க பிராண வாயு கிடையாது, தண்ணி கிடையாது இன்னு அமெரிக்கா சொல்லுச்சி, ஒலகமே பாட புத்தகத்துல ரொப்பி வச்சிக்கிட்டு படிச்சிச்சி.


100 கிலோ மீட்டர் துரதுல  செயற்கை கொள அனுப்பி இந்தியாவல தண்ணி கண்டு புடிக்க  முடியுதுன்னா . அம்பது வருசத்துக்கு முன்னாடியே  மனுசனை நிலவுக்கு நேரா அனுபிச்ச அவுகலாலே  ஏன் முடியலே.
நெலவுலெ உயிர் இல்ல இன்னு சொல்ல முக்கிய காரணம் தண்ணி கிடையாது. தண்ணீர் இருந்தால் அதுல மூனுல ஒரு பங்கு பிராண வாயு.  சூரியன் பட்டா  ஆடோமாடிக்கா ஆவியாகி பிராண வாயு வந்துரும். இப்போ தண்ணி இருக்குதுன்னா, இவுளோ நாளா அமெரிக்க சொன்னது  பொய்யா ?

இங்கன  தாங்க  எனக்கொரு  சந்தேகம் ?

மொதல்ல அமெரிக்க ஆளை அனுப்புனது உண்மையா ?
ஏன் கேக்குறேன்னா ?

அமெரிக்கா அமர்களமா ஆளெல்லாம் அனுபிச்சி ஒலகம் பூரா அத ஒளிபரப்பி, நான்தான் வல்லரசு இன்னு தம்பட்டம் அடிச்சபோது அத நம்ப முடியாத நாடுகள் " அதெல்லாம் சரிதான் அந்த ஒளிபரப்புன ரீல கொஞ்சம் கொடுங்க, நாங்க பரிசோதன பண்ணி சொல்றோமுன்னங்க "

அதுக்கு அமெரிக்கா சொன்ன பதில் இருக்கே

"படமெல்லாம் எடுத்து ஒளிபரப்பிட்டு இங்க தாங்க  வெச்சிருந்தோம், அது எப்புடி காணாம போச்சின்னு தான் தெரியல "

எது எது? வரலாற்றிலேயே முக்கியமான நிகழ்வு, நிலால மனிதன் கால் வெச்சது. அத ஏதோ அப்பள கட்ட காணோமுன்ற மாதிரி சொல்றத நம்பவாங்க முடியிது ?

இங்கன  தாங்க  எனக்கொரு  சந்தேகம் ?

நாமெல்லாம் ஒருதடவ புது எடத்துக்கு போனாலே பத்துவாட்டி பங்காளிங்கள எல்லாம் மறுபடியும் கூட்டிகிட்டு போவோம். ஆனா அமெரிக்கா அம்பது வருசமாகியும்  போகவே இல்லையே ஏன் ?

இங்கன  தாங்க " டாடி எனக்கொரு டவுட்டு " அபுடீன்னு சந்தேகம் ?

இந்தியா  ஒரு சின்ன செயற்கை கொள அனுப்பி தண்ணி இருக்குன்னு சொன்ன வொடனே, அவசர அவசரமா ஒரு குண்ட போட்டு ஆமா ஆமா தண்ணி இருக்குன்னு சொன்னா ? இம்புட்டு வருசமா அமெரிக்கா இன்னாங்க பண்ணிக்கிட்டு இருந்துது ?

ஆனா அவனுக  சொல்றதுதான் தான் அறிவியல், ஆராய்ச்சி, விஞ்ஞானம் முன்னு நாம வாய பொளந்துகிட்டு கேட்டுகிட்டு இருக்கோம்.

எனக்கென்னமோ இது நாள் வரைக்கும் என் அஞ்சாம் கிளாஸ் புக்குல அமெரிக்கா அசிங்கம் பண்ணதா தாங்க தோணுது

அதெல்லாம் சரி இம்புட்டு வெவரமா கேள்வி கேக்குறியேடா வெளங்காத பயலே ! நீ சொன்ன தகவல் எல்லாம் உண்மையான்னு கேட்டா ?

என்ன ஏம்முல்ல கேக்குற, என்ன ஏன் கேக்கன்கிறேன் 


Thursday, March 7, 2013

தேச பற்றுள்ள மனிதன் இறந்த நாள்




" ஹீஉகோ சாவேஸ் "

 இந்த பெயர் வாயில் நுழைய வில்லை,

யார் இந்த மனிதன் என்று எந்த எதிர் பரப்பும் இல்லாமல் தான் அவரை படிக்க ஆரம்பித்தேன்,

ஒரு தனி மனிதன் நாட்டையும் மக்களையும் உண்மையை நேசித்தால், அவர்களுக்காக உயிரையும் துச்சமென மதித்து போராடினால்

மக்கள் அவனை (அவரை ) காப்பாற்றி,
கொண்டாடி,
தலைவனாக்கி
அவரால் அந்த நாடே செழித்து
ஊழல் ஒழிந்து
அரசு பணம் முதலாளிகள் கையில் சிக்காமல்
 பொது சேவைக்கு பயன்பட்டு

அந்நிய சதியால் காணமல் போய்,
 மக்களே திரண்டு காப்பாற்றி
 மீண்டும் அரசனாகி

என்ன சினிமா கதை போல் இருக்குதா?
நம்ப முடிய வில்லையா ?

நானும் தான் நம்ப வில்லை, நாள் பூரா இவரையே யோசித்து கொண்டிருந்தேன்,

இப்படி ஒரு மனிதரா, சாத்தியமா ?

வெனிசுலவெ மக்கள் புண்ணியம் செய்தவர்கள்,

ஹும் நாமும் தான் இருக்கிறோம் சுதந்திரம் பெற்று அறுபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது,

அட போங்கபா, நமக்கெல்லாம் விமோசனமே கிடையாது,

வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் ஏதோ வெனிசுலவெ மக்களாவது நல்ல இருக்கட்டும், ஒரு முதுகெலும்பு உள்ள தலைவர் கேடசிருக்கர் இன்னு நெனெச்சேன்

அது பொறுக்கலையா ஆண்டவனுக்கு!

மனசே சரியில்ல

ஆண்டவா இனிமேலாவது மக்களுக்காக வாழும் நல்ல மனிதர்களை பூமியில் விட்டு வை