Friday, November 6, 2009

ஒரு தலை முறை மெல்ல மாறுகிறது

ஏதேதோ யோசனையில் நேரமாகி விட்டதால் பெங்களுரு செல்ல பேருந்து நிலையம் வந்தேன், இரவு பத்தே முக்கால் வண்டி, இன்னும் நேரமிருந்ததால் காத்திருந்தேன்,

யோசனைகள் எங்கோ சென்றன, வாழ்க்கை போராட்டம், படிப்பு, வேலை, பல ஊர்கள் அனுபவங்கள் என மெதுவாக அசைபோட்டேன்

நான் படித்து முடித்து வேலை தேடிய நேரம், என் அப்பாவின் நண்பர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பேச்சுக்கிடையே அவர் வேலை செய்யும் கம்பனியில் கம்ப்யூடர் தெரிந்த பட்டதாரிக்கு தேவை இருப்பதாகவும் சொன்னார். நான் உடனே வேலை தேடுவதாகவும் கம்ப்யூடர் தெரியும் என்றும் சொன்னேன். அவர் தர்ம சங்கடமாய் சிரித்தார் பிறகு அவர் கம்பனியில் அவரின் சாதிக்கு மட்டுமே முதலிடம் என்றும் (அது ஒரு பிரபலமான சிமெண்டு கம்பனி), கம்ப்யூடர் பற்றி தெரியா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர் சாதியாய் இருப்பது முக்கியம் என்றும், வேண்டும் என்றால் கம்பனியே கம்ப்யூடரில் பயிற்சி கொடுக்கும் என்றும் சொன்னார், எனவே இப்போதைக்கு அவரின் உறவுகார பையனுக்கு சொல்லி இருப்பதாகவும் சொன்னார்.

அந்த வயதில் என்னால் திறமையை விட சாதியை தான் முக்கியமாய் பார்கிறார்கள் என்ற எதார்த்தத்தை ஒத்துகொள்ள முடிய வில்லை. நகர் புறத்தில் வளர்ந்து சினிமாவில் மட்டுமே பார்த்த காட்சிகளை நேரில் பார்க்க மனம் மறுத்தது.

ஏன்? நான் படிக்க கல்லூரியில் இடம் தேடி அலைந்த போது, கல்லுரியில் இடமும் மற்றும் வருட பணமும் நாங்களே கட்டுவோம் நீ எங்கள் மதத்தில் சேர்ந்தால் என்றவர்களை நான் அறிவேன்.

இப்படி சாதியம் மதமும் வேரோடி சிதைந்த சமூகத்தில் சாதி கேட்காமல் திறமையை பார்ப்பதில் இந்த தொழில் நுட்ப கம்பனிகளுக்கு தான் முதலிடம் என நினைக்கிறேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு மருத்துவமும் பொறியியலும் பாமர மக்களுக்கு எட்டா படிப்புக்கள். ஒன்று அதீத புத்தியும் அல்லது அதீத பணமும் இருந்தால் மட்டுமே சாத்தியம். மற்றவர்கள் எல்லாம் என்ன படித்தாலும் குமாஸ்தா வேலை தான்.

எத்தனை கட்டுரைகள் இந்திய படிப்பு வெறும் குமாஸ்தாக்களை தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது என்று படித்திருக்கிறோம் மற்றும் அதை ஒத்துக்கொண்டும் இருக்கிறோம்,

அப்போது குமாஸ்தாக்களுக்கு என்ன சம்பளம்?, என்ன எதிர் காலம் ?

மூவாயிரம் ருபாய் சம்பளத்தில் காலத்தை முடித்தவர்கள் எத்தனை பேர் ?

இன்று தகவல் தொழில் நுட்பம் அதையும் விட்டு வைக்கவில்லை, ஐரோப்பாவில் ஒரு கணக்கர் செய்யும் வேலையை அதை விட பத்து மடங்கு குறைந்த சம்பளத்தில் ஒரு இந்தியர் செய்கிறார், அவர் சம்பளம் எடுத்தவுடன் பதினைந்து ஆயிரம், மூவாயிரம் சம்பளத்தில் இருந்து பதினைந்து ஆயிரம் சம்பளத்திற்கு நகர்ந்தவர்கள் நூறுபேரை எனக்கு தெரியும்.

யாரும் மேதாவி எழுத்தாளர்கள் எழுதுவது போல் குடித்துவிட்டு கூத்தடிக்க வில்லை(ஒரு பிரபல பத்திரிகையில் படித்தேன்), அவர்களின் குடும்ப தரத்தின் முன்னேற்றத்திற்கு அவர்கள் ஒரு முக்கிய தூணாகவே இருக்கிறார்கள், நடுத்தர மற்றும் கீழ் நிலை குடும்பங்கள் மெல்ல மாறுகின்றன.

மெதுவாய் ஒரு ஆரோக்யமான, நலமான குடும்ப சூழல்கள் உருவாகின்றன என்பதை கவனித்தீர்களா, கீழ் நடுத்தர வர்கங்கள் மெல்ல மேல் நடுத்தர வர்கங்களாய் மாறி குழ்ந்தைகளுக்கு நல்ல உணவும் நல்ல கல்வியும் கொடுக்க முடிகிறது என்பதை அறிவீர்களா?

தகவல் தொழில் நுட்ப துறையில் சம்பாதித்து யாரும் பெரிய பணக்காரர்கள் ஆகிவிட முடியாது
(வியாபாரிகளால் மட்டுமே முடியும் தற்போது உள்ள சூழ்நிலையில்)
ஆனால் ஒரு மேல் நடுத்தர வர்கங்களாய் மட்டுமே வாழ முடியும் என்பதாவது புரிகிறதா ?

ஒரு கிராமத்தில் படித்த ஒருவன் மருத்துவமோ பொறியியலோ படிக்க வசதி இல்லா விட்டாலும் ஒரு பி எஸ் சி படித்து சுலபமாய் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்க முடிகிறது. அவன் ஒருவன் சம்பாத்தியத்தில் அவன் தங்கையோ தம்பியோ ஏன் அவன் குழந்தையோ நல்ல கல்வி பெற முடிகிறது என்கிற எதார்தமாவது புரிகிறதா ?

பெங்கலுரு பஸ் வந்ததும் ஏறி என் இருக்கையில் அமர்ந்தேன், அதில் ஏறிய பெரும்பாலனோர் வார விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து திரும்பி செல்வோர்,

என் அருகில் ஒரு பெரியவர் வந்தார், சிறிது நேர மவுனதிர்க்கு பிறகு " தம்பி என் மகள் பக்கத்துக்கு சீட்டு, நீ கொஞ்சம் மாறி உக்காரிருயா " என்றார்

நான் சிரித்துக்கொண்டே " நான் மாறி வேறு ஒரு ஆண் உட்கார்ந்தால் என்ன செய்வீர்கள் " என்றேன்

விழித்தார்

நான் " வேறு பெண்களுடன் ஆண் உட்காரும் இடத்தில மாற சொல்லுங்கள், உங்கள் பெண் அங்கே உட்காரலாம் " என்றேன்

அவர் மெல்ல தேடிக்கொண்டே சென்றார். அவருக்கு அறுவது வயதிருக்கும், கிராமத்து முகம், ஏழ்மையை தெளிவாய் தெரிவிக்கும் உடை. அவர் மகளை தேடினேன். கருத்த கிராமத்து முகம் உயர்தர ஜீன்சும் பிரபலமான கம்பனியின் பையை முதுகில் மாட்டி, கையில் வண்ண அலை பேசியுடன் நின்றிருந்தாள்.

அப்போதுதான் ஒவ்வொருவரையும் கவனித்தேன், ஓரிரண்டு பேரை தவிர மற்றவர்கள் கீழ் நடுத்தரவர்க வீடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதை உணர முடிகிறது.

இதை இதை தான் நான் சொல்ல முயற்சித்தேன். பத்து இருவது வருடத்திற்கு முன் எத்தனை பேர் வயதுக்கு வந்த பெண்ணை நம்பி மொழி தெரியாத ஊரில் வேலைக்கு அனுப்பினார்கள்? யோசித்து பாருங்கள்! நம்பிக்கை கொடுத்தது எது ?

அந்த ஒரு பெண்ணின் முன்னேற்றம் நிச்சயம் அவள் வீட்டை பாதிக்கும், அவளின் தாய்க்கும் தந்தைக்கும் ஒரு சுகதரமான வீட்டை உருவாக்கி கொடுக்கும் என்பதை மறுக்க முடியுமா ? அல்லது அவளின் தம்பிக்கோ தங்கைக்கோ நல்ல கல்வியை பெற்று கொடுக்கும் என்பதை மறுக்க முடியுமா ?

வரப்புயர நீர் உயரும் நீருயர நெல்லுயரும் எனபது நம் ஆன்றோர் வாக்கில்லயா

ஒரு தலை முறை மெல்ல மாறுகிறது, இதை நல்ல படியாய் முன்னெடுத்து செல்வது நம் கடமை இல்லையா ?

குறிப்பு : கீழ் மற்றும் நாடு தர குடும்பங்களின் நிலை தகவல் தொழில் நுட்ப துறை வளர்ச்சியால் மெல்ல மாறுகிறது என்று பதிவு செய்ய விரும்புகிறேன், கடந்த ஐம்பது வருடங்களில் எந்த அரசோ அல்லது துறையோ இந்த மக்களின் வளர்ச்சிக்கு எந்த உண்மையான முயற்சியும் செய்ததாய் நினைவில்லை, வேலை இல்லா திண்டாட்டமே சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளுக்கும் இளைஞர்களின் வாழ்வு சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்ததை மறுக்க முடியாது. இப்போது ஏதோ ஒரு நாட்டின் நிறுவனங்களின் வீழ்ச்சி, நட்டங்களை தவிர்க்க நம் நாட்டில் கடை திறக்க, அதை எப்படி நல்ல வழியில் பயன் படுத்தி வீட்டையும் நாட்டையும் நம் குழ்ந்தை களின் எதிர் காலத்தை நல் வழி படுத்த யோசிக்க வேண்டுமே தவிர, இவர்கள் வளருகிறார்கள் அவர்கள் வளருகிறார்கள் என்று குறை சொல்வது நாம் எவ்வளவு எண்ண ஆரோக்கியம் இல்லாத சூழலில் வாழ்கிறோம் என்பதையே காட்டுகிறது.

இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

தொழில் நுட்ப வளர்ச்சியும் சமூக சீர் கேடுகளும்

இந்த முறை பாண்டிசேரி சென்ற அனுபவம் மறக்க கொஞ்ச நாள் எடுக்கும் என நினைக்கிறேன். என் தூரத்து உறவினரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன்.

அவர் சமீபத்தில் சென்னையில் இருந்து பாண்டிசேரி குடி பெயர்ந்தவர் (அந்த குடி இல்லை). அவர் கூறிய சில வாசகங்கள்:

" த்தா ...பசங்க வாடகை எல்லாம் ஏத்தி விட்டுடணுவ! மொதல்ல திருவாமூரில் ஆயிரம் ரூவா வாடகையில் இருந்தேன்! ரெண்டாயிரம் யெத்திட்டான்."

" அங்கருந்து போரூர் போனேன். ஒரு வருஷம் தான், நாலாயிரத்து ஐனுருணான்... கூடுவான் சேரி தண்டி போயிட்டேன். அங்கருந்து வேலைக்கி போவனும்! எத்தன வருஷம் தாக்கு புடிக்க? "

"வெலவாசி ஏறி போச்சி, முடியலை பேசாம வூருக்கே போயிடலாமுன்னு வூட்ட கட்டிகினு வூரோட வந்துட்டேன்."

" திடீர்ன்னு தம்மா தூண்டு பசங்க எல்லாம் முப்பதாயிரம் நாப்பதாயிரம் சம்பளம் வாங்கரனுங்க, எங்க இருந்து வரனுங்கன்னே தெரியல! இந்தி பேசறானுங்க, கேட்ட வாடக குடுகறனுங்க, கடசீல நம்ம போழப்புல மன்ன போடரனுங்க ...யா பசங்க" என்றார்

எனக்கு கேட்க ரொம்ப கழ்டமாக இருந்தது! ஒரு வளர்ச்சி எத்தனை ஏழை மக்களை பாதிக்கிறது! பேசவும் சங்கடமாக இருந்தது, ஆனாலும் பேச்சு தொடர்ந்தது , குடும்பத்தை பற்றி கேட்டேன், பிறகு சம்பாதிப்பது பற்றி திரும்பியது,

" எண்ணாங்க பண்றது எல்லாம் புரோக்கர் பண்ற வேலை! "

ஊரு தெரியாத பசங்கள நல்ல ஏமாத்தி வாடகைய ஏத்தி காமிச்சி, நல்லா கமிசன் பார்த்தாங்க! வூட்டு காரங்களும் காசு வருதுன்னு, இதுக்கு தோன போணாங்க!

"மெக்காநிக்கி, டைலறு ஏன் வுட்டு வேல செயிரவுங்க கூட சம்பாரிசாங்க பா"

அவர் தலையை ஆடினார், நான் விடாமல் தொடர்ந்தேன்

" எனக்கு தெரிந்து ஒரு அம்மா பல வருடம் வேளச்சேரியில் வீடு வேலை செய்தவர்கள், ரெண்டு வருசத்துல வீடு ப்ரோகரா நல்லா சம்பாரிசாங்க!

சொந்தமா வீடு கட்டி செங்கல்பட்டுல எடம் வாங்கி ஸ்கூடில போறாங்க இப்போ! உண்மையிலேயே அசந்துட்டேன்!

இன்னா காசு போரண்டுச்சு, அது தான் டைம், சூப்பரா சம்பாரிசாங்க " என்றேன்

அவர் " நான் கூட போன வருடம் ட்ரைவர் வேலைய விட்டுட்டு இரங்கினேன், அப்புறம் தான் பேருங்களதூரில் எடம் வாங்கி போட்டுடு, தோ ஊரோட வூட்ட கட்டிகினு வந்துட்டேன்" என்றார்.

அவர் முகத்தில், தானும் வெவரமாநவன் என்ற பெருமிதம் இருந்தது(நான் எதிர் பார்த்து இதை தான்),

மீண்டும் ரியல் எஸ்டேட் மேலே வராதா என்று ட்ரைவர் வேலைக்கும் போகாமல் காத்துக்கொண்டு இருக்கிறார். நிலம் பத்திரம் கமிஷன் என்ருதான் அவர் பேச்சு இருந்தது.

ரியல் எஸ்டேட் அடங்கியதால் தற்போது ஊரோடு இருக்கிறார் என்பது புரிந்தது.
பிறகு பேச்சை மாற்றி ஏதேதோ பேசினேன்,

ஆனால் மனதில் பத்து வருடம் பின்னால் சென்றேன், மும்பைக்கு நான் புதியவன், இந்தி தெரியாது. வேலைக்கு புதியவன் என்பதால் மும்பைக்கு மாற்றலாக்கி விட்டார்கள். இனம் புரியாத பயம், மிரட்சி எப்போதும்.

திடீர் என ஒரு போன், வாடிக்கையாளர் இடத்தில இருக்கும் ஒரு உள்ளூர் என்ஜிநீயருக்கு உதவ வேண்டும் என்று முகவரி கொடுத்து போக சொன்னார்கள். ஆட்டோ பிடித்தேன், முகவரி சொன்னேன், அறுவது ருபாய் சொன்னான், பதினைந்து நிமிடத்தில் சரியாக சேர்ப்பித்தான், இரண்டு மணிநேரம் வேலை முடிந்து இருவரும் திரும்பினோம், உள்ளூர்காரர் ஆட்டோ பிடித்தார், அலுவலகம் திரும்பினோம், வெறும் இருவது ரூபாய், நீ ஏமாற்ற பட்டாய் என கேலியாய் சிரித்தார். இந்தி கத்துக்க சொன்னார், எனக்கு ஏனோ வலித்தது, புது ஊர் புது சூழலீல் நான் செயலற்றவனாக பலகீனனாக உணர்ந்தேன்.

எத்தனை பேர், ஆந்திர, மராட்டா, மாபி, உபி என எத்தனையோ பேர் தெரியாத மாநிலங்களில் இருந்தும், அதனுள் உள்ள ஊர்களில் இருந்தும் ஏன் நம் கன்யா குமாரி, ராமநாதபுரம் என எத்தனை பெண்கள் வந்து, அப்பா அம்மா உறவினர் விட்டு சென்னையில் அதிக வாடகை கொடுக்க வேண்டியிருக்கிறார்கள். இவர்கள் வேறு வழி இல்லாமல் ஏமாறுகிறார்கலே தவிர, விரும்பியா கொடுக்கிறார்கள். ஆனால் நாம் சொல்வது, ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிகிறார்கள், வாடகையை ஏற்றி விடுகிறார்கள் என்று. (இதேபோல் புனேவிலும் நோய்டாவிலும் தென் இந்தியர்கள் ஏமாறுகிறார்கள்)

உண்மையில் நாம் இவர்களை மறைமுகமாய் அடித்து பிடுங்கி விட்டு, ஏமாற்றி விட்டு கவனமாய் அவர்களையே குற்றம் சொல்கிறோம். ஆனால் நாம் இதற்கு வெட்க படுவதே இல்லை.

இவர்களை காட்டி மற்றவர்கள் சம்பாதிகிறார்கள் என்பதே உண்மை. இது தவறு என்றும் சொல்ல முடியவில்லை!

காரணம்! மாற்றங்கள் நிகழும் போது, பல நிகழ்வுகள் நல்லதாகவும் கெட்டதாகவும் பார்க்கப்படும். இதையே நல்ல பார்வையில் வீடு புரோக்கர் வேலை பலவகை பட்ட தொழிலாளர்களுக்கு பகுதி நேரமாக வருவாய் ஈட்டி தந்தது என்பது உண்மை. பல குடும்பங்கள் நன்றாக வாழ்ந்தது என்பது உண்மை

யோசிப்போமா ?

இல்லை இதையும் தாண்டி நாங்கள் குறை சொல்லுவோம் என்றால், நானும் வருகிறேன் உங்களுடன்.

திட்டி தீர்ப்போம் (நாமெல்லாம் என்னக்கி வெட்க பட்டோம்).

Friday, June 26, 2009

எங்கள் கூட்டம்

வால் இருந்த போதே அன்று
ஊர் எரித்து எங்கள் கூட்டம் !
மனைவியை மாற்றானிடம் தொலைத்தவன் கூட
உதவி என்று வந்தது எங்களிடம் தான் !
தலைவனை இழந்து தவித்தது எங்கள் கூட்டம் !
அவன் வீரன்!
நேரெ நின்று போர் புரிந்தான், மரணத்தின் போதும்!
மறைந்து இருந்துதானே வீழ்த்தினீர்கள் வாலியை !
எப்படி நேர்மையை நேருக்கு நேர் நோக்க முடியும் !
எந்த ஞயமும் கூற முடியவில்லை இன்றும் இவர்களால் !
சரித்திரம் எழுதுவது நீங்களல்லவா, அப்போதும் இப்போதும் !
வாலி வீழ்ந்தாலும் சரி! ராமனும் ராவணனும் கூட்டு சதியில்
குலாவினாலும் சரி ! ஒன்றை மறவாதீர் !
சரித்திரம் எங்களுக்கு அனுமனை விட்டுத்தான் செல்லும் !
வாலறுந்த கூடத்தில் இருந்து நாங்கள் வளர்ந்து நாளாயிற்று !
ஞயத்தொடு நிற்கும் எங்களை எவனும் வென்றதில்லை !
இது காலம் சொல்லும் தீர்ப்பு !
எதிர்ப்பது ராமனனாலும் சரி ராவணன் ஆனாலும் சரி !

உலகம் எங்களை தூற்றுதும்

உலகம் எங்களை தூற்றுதும்!

எங்கள் உயிருக்கு போராடுவதால் நங்கள் போராளிகள் !
தொலைந்த உறவுகளை தீவிரமாய் தேடுவதால் தீவிரவாதிகள் !
ஆயுதம் ஏந்தி போரடுவதாய் கூறி,
உலகம் கண்களை மூடிக்கொண்டது !

இப்போது எங்களை அழிக்க ஆயுதங்களுடன் !

உலகம் எங்களை தூற்றுதும் !

போர் ஆயுதங்கள் எங்களை துரத்த
உறவுகள் கை பிடித்து ஓடினோம் !
வீழ்ந்து வெடித்த எறிகணையில்
என் கை பிடித்த மனைவியை காணவில்லை, என் கைகளுடன் !

உலகம் எங்களை தூற்றுதும் !

கதறி அழுத கூட்டம் சிதறி ஓடியது
மற்றொரு எறிகணை வெடிப்பில் !
எனக்கும் ஏழு வயதில் ஒரு மகன் இருந்தான் !

உலகம் எங்களை தூற்றுதும் !

கொடூர பயம் கொடுத்த ஒலிகள்லேல்லாம் கணத்தில்
நின்று போய் ஓங்காரம் மட்டும் என் செவியில் !
உக்கிரமாய் நடக்கும் உழியாட்டம்,
மவுன படமாய் எனக்கு மட்டும் !
என் செவிப்பறை கிழிந்து இருந்தது !

உலகம் எங்களை தூற்றுதும் !

எழுந்தோட என் உள்ளம் முயல்கையில்
நான் அறிந்தேன் என் கால்கள் இரண்டும் காணமல் போனதை !
உடல் எரிந்தது உப்பு காற்றில்,
உயிர் உருகியது கடற் கரை மணலில் !

உலகம் எங்களை தூற்றுதும் !

இது என் பூமி !
நான் இங்குதான் இறந்தேன் !
மீண்டும் மீண்டும் கால காலமாய் போராடி போராடி!
நான் இங்குதான் இறந்தேன் !

கால சக்கரம் ஓரிடத்தில் நிற்பதில்லை என்றும் !
இன்று நீ நிற்கும் இடத்தில ஒருநாள் நான் !
அழுகையும் கதறலும் என் செவியில் !
பகை முடிப்போம் !

உலகம் எங்களை தூற்றுதும் !
மறுபடியும்

Thursday, March 26, 2009

ஆறு கோடி பேர்

அது ஒரு பள்ளி கூடமாய் இருக்க வேண்டும், முதல் மாடி என்று நினைக்கிறேன், கூட்டமாய் நின்று இருந்தார்கள். குறைந்தது முப்பது பேர் இருப்பார்கள்.

அது ஒரு வகுப்பறை, மூலையில் ஒருவன் சரிந்து உட்கார்ந்து இருந்தான், எல்லோர் கண்களிலும் வெறி, கூச்சலில் வார்த்தைகள் புரிய வில்லை, நான் முன்னேறினேன், உள் நுழைந்தேன்....

வெறியோடு தாக்கி கொண்டு இருந்தார்கள்

" கொல்லு, கொல்லுடா அவனை "

ஒருவன் ஏறி காலால் மிதித்து கொண்டு இருந்தான்.

நான் " நிறுத்துங்கள் யார் இவன்? "

என் குரல் கொஞ்சம் கணீர் வகை ! எல்லோரும் என்னை பார்த்தார்கள்

" இவன் சிங்களன் "

" அதனால் என்ன? மனிதன் தானே? "

நான் குனிந்து அவனை பார்த்தேன், முகம் வீங்கி, உதடு கிழிந்து, தரை பார்த்து இருந்தான்

" அரசாங்கம் செய்யும் தவறுக்கு இவன் பலியா? "

" தண்ணி குடுங்கபா "

யாரிடமும் அசைவில்லை !

பல குரல்கள் பதிலாய், அதில் ஒன்று " அப்போ தமிழ்ர்கள் மட்டும் பலியாகலாம் கேட்பரில்லையோ ? "

என்ன செய்வது கோபம், எல்லோருக்கும் கோபம்

" சரி விடப்பா! எழுந்திரு "

" அங்கே தமிழர்களை வதைத்தால் கிடைக்கும் சிங்களனை இவர்கள் வதைகிறார்கள்"

" இரண்டுமே தவறில்லையா? " நான் நடு நிலைமை பேசினேன்

" நாடு இருவருக்கும் பொது தானே! "

அவன் என்னை பார்க்க வில்லை, தரையை பார்த்து " அது எங்கள் நாடு ! நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள், நீங்கள் போய் விட்டால் ஏன் பிரச்னை ? "

இவ்வளவு கூட்டத்தில் நான் இந்த பதிலை எதிர் பார்க்கவில்லை !
தைரியம்... எங்கிருந்து வந்தது ? கேள்வி கேட்கிறான்
இப்படி பேசி தான் உதை வாங்கி இருக்கிறானோ ?

நான் சமாதானமாய்
" உங்கள் மகா வம்சமே கூறுகிறது நீங்கள் வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று"
அப்படி என்றல் நீங்கள் மண்ணின் மைந்தர்கள் இல்லை, சரி யார் முதலின் போனது ? ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் நாங்களா ? இல்லை மூவாயிரம் மயில்களுக்கு அப்பால் உள்ள நீங்களா ? "

" பொய் சொல்ல உங்களுக்கு வெட்கமாய் இல்லை ? "

அவன் என்னை பார்க்க வில்லை, குனிந்து கொண்டே " நாங்கள் தான் பெரும்பான்மை இங்கே ! முடிந்தால் சிறுபான்மை தமிழர் அனுசரித்து போக வேண்டும்! பிரச்சனை செய்தால் அரசாங்கம் என்ன செய்யும் ? "

அவன் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை அங்கே !!!!

அவன் " சிங்களர் ரெண்டு கோடிக்கும் மேல், நீங்கள் வெறும் ஐம்பது லட்சம் "

எனக்கு ரத்தம் தலைகேறியது !

" என்ன சொன்னே? நாங்கள் சிறுபான்மையா ? 1950௦ இல் தமிழர்கள் ஐம்பது லட்சம் பேர், சிங்களர் ஐம்பது லட்சம் பேர் "

" ஐம்பது வருடம் ஓடிவிட்டது இப்போ நீங்கள் ரெண்டு கோடி பேர் ஆனால் தமிழர்கள் மட்டும் இன்னும் ஐம்பது லட்சம் எப்படி ? "

" ஐம்பது வருடமாய் அங்கே யாருக்கும் குழந்தை பிறக்கலியா? அங்கே தமிழ் பெண்கள் வயசுக்கு வரலியா? இல்ல எந்த தமிழனுக்கும் ஆண்மையே இல்லியா? "

அவன் லேசாக தலை திருப்பினான், ஓர கண்ணால் என்னை பார்த்தான்!
" எனக்கெப்படி தெரியும் ?" அவன் பார்வையில் ஏளனம் குடி கொண்டிருந்தது !

நான் நிதானத்தை இழந்தேன்! என்னை கட்டு படுத்த முடிய வில்லை !

" பாவிகளா ! தோட்டத்தில் செடி வளர்த்து அழகுக்கு வெட்டி வெட்டி அதை மரமாக விடாமல் செய்வது போல் ஒரு இனத்தையே வாழ விடாமல் செய்து விட்டீர்களே ! நாங்கள் சிறுபான்மையா ? "

" தெரிஞ்சிக்கோ! நாங்கள் ஐந்து கோடி தமிழர்கள் கூப்பிடு துரத்தில் இருக்கிறோம்! உலக தமிழர்கள் ஒரு கோடி பேர் உலகம் எங்கும் இருகிறார்கள் ! நாங்க நெனச்சோம் வேரறுத்து விடுவோம், நீங்க வெறும் ரெண்டு கோடிடா நாங்கள் ஆறு கோடி "

" புல் பூண்டு கூட இருக்காது உன் தேசத்தில்! "

" கும்பிடும் சாமிக்கு கூட கைல வேல் கம்பு வீச்சருவா குடுக்குற கூட்டம் எங்க கூட்டம் ! எங்களையா ஆண்மை இல்லாதவங்கன்னு சொன்ன? "

என் கைகள் முறுக்கேறின, நான் வெறி கொண்டவனை தாக்கி கொண்டிருந்தேன், கத்தி கொண்டே

" நாங்க ஆறு கோடி பேருடா, ஆறு கோடி பேர் "

" என்னங்க! என்னங்க! "

இருட்டில் என் மனைவி சுவிட்சை தேடி போட்டாள்! விளக்கு வெளிச்சம் கண் கூசியது, என் கைகள் முறுக்கி கொண்டு இருந்தது! கண்கள் சிவந்து போய் படுக்கையில் உட்கார்ந்த படியே நான்.

" என்னங்க ஒரே தொந்தரவா போச்சி ! நடு ராத்திரியில் எழுந்து ஒக்கார்ந்து கிட்டு ஆறு கோடி எட்டு கோடி இன்னு கிட்டு !"

" எங்கனா தூங்க உடரிங்களா ! எனக்குன்னு வந்து வாச்சிங்களே ! நீங்க ஒருத்தர் தாங்க இப்படி "

நான் அவளை திரும்பி பார்த்தேன், அவள் முனகி கொண்டே தூங்கி விட்டிருந்தாள்...

" நாங்க ஒருத்தர் இல்லடி ஆறு கோடி பேர் " தனியாய் இருட்டில் விட்டத்தை பார்த்துக்கொண்டே நான்.

Wednesday, February 4, 2009

நிஜம்

அமைதியாய் அவள் கண்கள் எனை நோக்கிய போது


தீபாவளி சப்தம் எனக்குள் மட்டும் !


அமைதியின் அழுத்தத்தில் என் மனம்

மரித்து விடுமே என்பதால் !

வானத்தின் துரத்தை பேசினேன் !

கடலின் ஆழத்தை பேசினேன் !

பூக்களின் பனித்துளியில்

உலகத்தின் உருண்டையை பேசினேன் !


சந்திரன் நிலையை பொறுத்து

கடல் எழும் கட்டளை பேசினேன் !

வாழ்கையின் துரம் கடந்ததால்

இடைவேளை வந்தது !

இரண்டு நாள் வேறிடம் போக

வார்த்தைகள் வாய் மூடி கொண்டன !

பூக்களின் புனர் ஜென்மம் பற்றி

போனதும் பேசவேண்டும் !


குழ்ந்தையின் தூக்க சிரிப்பை பற்றி

ஏதேனும் கேட்க வேண்டும் !


வாரமாய் விரதம் முடித்து

மூட்டையாய் நெஞ்சை சுமந்து !


ஊர் திரும்பும் எண்ணம்

வேர் திரும்பும் நேரம்


காதோரம் சேதி வந்தது !

அவள் காதுக்கு கம்மல் பற்றி பேசியவனை
கை பிடித்ததாய் !

- சுவாதி

நல்லவன்

நகரத்தை ஒட்டி புதிதாய் ஒரு கட்டிடம் !

கண்ணாடி மாளிகையாய் கட்டும் கம்பீரம் !

முதல் பார்வையில்

வாய் பிளந்த அந்த மனிதனுக்கு

மாளிகை வழி பிளந்தது !

இனி அவன் அலுவலகம் இதுதான்!

சுற்றிலும் பூங்காவாய் ! நடுவில் மெல்லிய நீரோடையாய்!

புற்களின் பால் சிரிப்பாய்! மிச்ச மரங்களின் தலையாட்டலாய்!

மனிதன் காங்க்ரீட் காடுகளை தாண்டி

முன்னேறி விட்டான் என்பதன் சாட்சியாய்!


தேநீர் இடைவேளைக்கு வந்தவன்

சுற்றி பார்த்ததில் சொக்கி போனான்!

அவனை சுற்றி வண்ணத்து

பூச்சிகள் வேறு வழி காட்டின!

மீண்டு வரும் போதுதான் தெரிந்தது !

வழி தவறிய வண்ணத்து பூச்சிகள் சில

கண்ணாடி மாளிகையில் சிறை பட்டன என்று !

பாவம் அந்த சின்ன உயிர் சுற்றி மூடியது

கண்ணாடி என்று அறியாமல் முட்டி மோதின !

சில விட்டம் பார்த்து உயிர் துறந்தன!

பார்த்த அவன் பதறி போனான்!

மனித முன்னேற்ற கண்மூடி பாதையில்

சிரமங்கள் எல்லாம் சின்ன உயிர்களுக்கு தான் !

ஓய்ந்து போன அவைகளை ஒவோன்றாய் பிடித்து

தோட்டத்தில் வைத்து வழியனுப்பினான் !

இன்று அவன் புண்ணிய கணக்கில் ஆறு எண்கள் கூடியிருக்கும் !

அவனுக்குள் சற்றே பெருமிதம் ! நான் மிகவும் நல்லவன் !

கருணை உள்ளவன் ! மற்ற உயிர்களுக்கு நேசம் உள்ளவன் !

கடவுள் நம்மை கவனித்து கொண்டிருக்கிறார் !

அதனால் தான் வாழ்கையின் வெகு துரத்திற்கு கைப்பிடித்து வந்திருக்கிறார் !

சந்தோஷ நெஞ்சத்துடன் வேலை என்னும் கடலில் முழ்கிப் போனான்!

நேரம் தாண்டி வேலை அவனை வெளியே துப்பியது !

பசித்த வயிறுடன் வெளியே வந்தான் !
கண்ணாடி சிறைகள் தண்ணீரால் வழிந்து போயிருந்தன !

மழை ! எத்தனை பேர் வெறுத்தாலும் எனக்கு மட்டும்

எப்போதும் பிடித்த மழை !

நடை ஓட்டமாகியது ! புற்கள் அவன் முன் வந்தன !

செடிகள் குளித்து முடித்த குழ்ந்தையாய் நீர் வடியும் முகத்தோடு!

அப்போது தான் அவன் கவனித்தான் இரண்டு இறக்கைகள் மட்டும் !
ஐயோ என்ன ஆயிற்று !

வண்ணத்து பூச்சிகள் ஒளிந்துகொள்ள இடம் இல்லையா ?

ஒன்று, இரண்டு, பலவாய் பல இடங்களில் புதைந்து கிடந்தன !


பத்து நிமிடம் பெய்த மழையில் பலியான பூச்சிகளின் எண்ணிக்கை என்ன ?

ஈரம் சொட்ட சொட்ட இயற்கை அவனை பார்த்து

சிரித்து கொண்டிருந்தது ! வெள்ளையாய் !


- கமலீ புத்திரன்

அவள் வருவாளென

ஒரு நாள் சந்திப்பதற்காய் ஆறு நாட்கள் உயிர் வாழ்ந்து !

காலை வெயில் முகத்தில் அறைந்தாலும் !
பேருந்து நிழர் குடையில் எல்லோரும் நிற்க !

அவள் வருவாளென !
நான் மட்டும் தனித்து நிற்பேன் !

தேடும் போது தெரிய வேண்டுமே என்று !

எல்லாம் சட்டென்று ஞாபகத்தில் ஓடியது !

வெயில் தாளா மனைவிக்கு
குடைபிடித்து கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் !

- கமலீ புத்திரன்

நிகழ்வு

சுட்டெரிக்கும் வெயில் !
வேற்குருவின் ஆரம்பம் !
தலையின் வியர்வை முகத்தில் வழிய
ஆடும் குழந்தைகள் தோட்டத்தில் !

முகம் துடைத்தபடியே
அதட்டிக் கொண்டிருக்கும் அம்மா!

குளிர்பானம் குடிக்காமல்
அடம் பிடிக்கும் குழந்தை !

இதை பார்த்து சிரித்துக்கொண்டே செல்லும்
காலில் செருப்பில்லா காய்கறிச் சிறுவன் !

- கமலீ புத்திரன்