Friday, June 26, 2009

எங்கள் கூட்டம்

வால் இருந்த போதே அன்று
ஊர் எரித்து எங்கள் கூட்டம் !
மனைவியை மாற்றானிடம் தொலைத்தவன் கூட
உதவி என்று வந்தது எங்களிடம் தான் !
தலைவனை இழந்து தவித்தது எங்கள் கூட்டம் !
அவன் வீரன்!
நேரெ நின்று போர் புரிந்தான், மரணத்தின் போதும்!
மறைந்து இருந்துதானே வீழ்த்தினீர்கள் வாலியை !
எப்படி நேர்மையை நேருக்கு நேர் நோக்க முடியும் !
எந்த ஞயமும் கூற முடியவில்லை இன்றும் இவர்களால் !
சரித்திரம் எழுதுவது நீங்களல்லவா, அப்போதும் இப்போதும் !
வாலி வீழ்ந்தாலும் சரி! ராமனும் ராவணனும் கூட்டு சதியில்
குலாவினாலும் சரி ! ஒன்றை மறவாதீர் !
சரித்திரம் எங்களுக்கு அனுமனை விட்டுத்தான் செல்லும் !
வாலறுந்த கூடத்தில் இருந்து நாங்கள் வளர்ந்து நாளாயிற்று !
ஞயத்தொடு நிற்கும் எங்களை எவனும் வென்றதில்லை !
இது காலம் சொல்லும் தீர்ப்பு !
எதிர்ப்பது ராமனனாலும் சரி ராவணன் ஆனாலும் சரி !

No comments: