Thursday, March 7, 2013

தேச பற்றுள்ள மனிதன் இறந்த நாள்




" ஹீஉகோ சாவேஸ் "

 இந்த பெயர் வாயில் நுழைய வில்லை,

யார் இந்த மனிதன் என்று எந்த எதிர் பரப்பும் இல்லாமல் தான் அவரை படிக்க ஆரம்பித்தேன்,

ஒரு தனி மனிதன் நாட்டையும் மக்களையும் உண்மையை நேசித்தால், அவர்களுக்காக உயிரையும் துச்சமென மதித்து போராடினால்

மக்கள் அவனை (அவரை ) காப்பாற்றி,
கொண்டாடி,
தலைவனாக்கி
அவரால் அந்த நாடே செழித்து
ஊழல் ஒழிந்து
அரசு பணம் முதலாளிகள் கையில் சிக்காமல்
 பொது சேவைக்கு பயன்பட்டு

அந்நிய சதியால் காணமல் போய்,
 மக்களே திரண்டு காப்பாற்றி
 மீண்டும் அரசனாகி

என்ன சினிமா கதை போல் இருக்குதா?
நம்ப முடிய வில்லையா ?

நானும் தான் நம்ப வில்லை, நாள் பூரா இவரையே யோசித்து கொண்டிருந்தேன்,

இப்படி ஒரு மனிதரா, சாத்தியமா ?

வெனிசுலவெ மக்கள் புண்ணியம் செய்தவர்கள்,

ஹும் நாமும் தான் இருக்கிறோம் சுதந்திரம் பெற்று அறுபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது,

அட போங்கபா, நமக்கெல்லாம் விமோசனமே கிடையாது,

வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் ஏதோ வெனிசுலவெ மக்களாவது நல்ல இருக்கட்டும், ஒரு முதுகெலும்பு உள்ள தலைவர் கேடசிருக்கர் இன்னு நெனெச்சேன்

அது பொறுக்கலையா ஆண்டவனுக்கு!

மனசே சரியில்ல

ஆண்டவா இனிமேலாவது மக்களுக்காக வாழும் நல்ல மனிதர்களை பூமியில் விட்டு வை