Wednesday, February 4, 2009

அவள் வருவாளென

ஒரு நாள் சந்திப்பதற்காய் ஆறு நாட்கள் உயிர் வாழ்ந்து !

காலை வெயில் முகத்தில் அறைந்தாலும் !
பேருந்து நிழர் குடையில் எல்லோரும் நிற்க !

அவள் வருவாளென !
நான் மட்டும் தனித்து நிற்பேன் !

தேடும் போது தெரிய வேண்டுமே என்று !

எல்லாம் சட்டென்று ஞாபகத்தில் ஓடியது !

வெயில் தாளா மனைவிக்கு
குடைபிடித்து கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் !

- கமலீ புத்திரன்

No comments: