ஒரு நாள் சந்திப்பதற்காய் ஆறு நாட்கள் உயிர் வாழ்ந்து !
காலை வெயில் முகத்தில் அறைந்தாலும் !
பேருந்து நிழர் குடையில் எல்லோரும் நிற்க !
அவள் வருவாளென !
நான் மட்டும் தனித்து நிற்பேன் !
தேடும் போது தெரிய வேண்டுமே என்று !
எல்லாம் சட்டென்று ஞாபகத்தில் ஓடியது !
வெயில் தாளா மனைவிக்கு
குடைபிடித்து கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் !
- கமலீ புத்திரன்
No comments:
Post a Comment