Wednesday, February 4, 2009

நிகழ்வு

சுட்டெரிக்கும் வெயில் !
வேற்குருவின் ஆரம்பம் !
தலையின் வியர்வை முகத்தில் வழிய
ஆடும் குழந்தைகள் தோட்டத்தில் !

முகம் துடைத்தபடியே
அதட்டிக் கொண்டிருக்கும் அம்மா!

குளிர்பானம் குடிக்காமல்
அடம் பிடிக்கும் குழந்தை !

இதை பார்த்து சிரித்துக்கொண்டே செல்லும்
காலில் செருப்பில்லா காய்கறிச் சிறுவன் !

- கமலீ புத்திரன்

No comments: