அமைதியாய் அவள் கண்கள் எனை நோக்கிய போது
தீபாவளி சப்தம் எனக்குள் மட்டும் !
அமைதியின் அழுத்தத்தில் என் மனம்
மரித்து விடுமே என்பதால் !
வானத்தின் துரத்தை பேசினேன் !
கடலின் ஆழத்தை பேசினேன் !
பூக்களின் பனித்துளியில்
உலகத்தின் உருண்டையை பேசினேன் !
சந்திரன் நிலையை பொறுத்து
கடல் எழும் கட்டளை பேசினேன் !
வாழ்கையின் துரம் கடந்ததால்
இடைவேளை வந்தது !
இரண்டு நாள் வேறிடம் போக
வார்த்தைகள் வாய் மூடி கொண்டன !
பூக்களின் புனர் ஜென்மம் பற்றி
போனதும் பேசவேண்டும் !
குழ்ந்தையின் தூக்க சிரிப்பை பற்றி
ஏதேனும் கேட்க வேண்டும் !
வாரமாய் விரதம் முடித்து
மூட்டையாய் நெஞ்சை சுமந்து !
ஊர் திரும்பும் எண்ணம்
வேர் திரும்பும் நேரம்
காதோரம் சேதி வந்தது !
அவள் காதுக்கு கம்மல் பற்றி பேசியவனை
கை பிடித்ததாய் !
- சுவாதி
No comments:
Post a Comment