Wednesday, February 4, 2009

நிஜம்

அமைதியாய் அவள் கண்கள் எனை நோக்கிய போது


தீபாவளி சப்தம் எனக்குள் மட்டும் !


அமைதியின் அழுத்தத்தில் என் மனம்

மரித்து விடுமே என்பதால் !

வானத்தின் துரத்தை பேசினேன் !

கடலின் ஆழத்தை பேசினேன் !

பூக்களின் பனித்துளியில்

உலகத்தின் உருண்டையை பேசினேன் !


சந்திரன் நிலையை பொறுத்து

கடல் எழும் கட்டளை பேசினேன் !

வாழ்கையின் துரம் கடந்ததால்

இடைவேளை வந்தது !

இரண்டு நாள் வேறிடம் போக

வார்த்தைகள் வாய் மூடி கொண்டன !

பூக்களின் புனர் ஜென்மம் பற்றி

போனதும் பேசவேண்டும் !


குழ்ந்தையின் தூக்க சிரிப்பை பற்றி

ஏதேனும் கேட்க வேண்டும் !


வாரமாய் விரதம் முடித்து

மூட்டையாய் நெஞ்சை சுமந்து !


ஊர் திரும்பும் எண்ணம்

வேர் திரும்பும் நேரம்


காதோரம் சேதி வந்தது !

அவள் காதுக்கு கம்மல் பற்றி பேசியவனை
கை பிடித்ததாய் !

- சுவாதி

No comments: